Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3 சிங்க குட்டிகள், 4 புலிக்குட்டிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார். சிங்கக்குட்டிகளுக்கு பிரதீப், தஷ்ணா, நிரஞ்சனா என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார். இதை தொடர்ந்து புலிக்குட்டிகளுக்கு வெண்மதி, யுகா, மித்ரன், ரித்விக் என முதல்வர் பெயர் சூட்டினார். மேலும் வண்டலூர் பூங்காவில் வளமைப்படுத்தப்பட்ட காண்டாமிருக இருப்பிடத்தை பார்வையாளர்களுக்கு முதல்வர் திறந்து வைத்தார்.